Sunday, June 02, 2024
Ilayaraja & Katy Perry
Thursday, November 09, 2023
Breakfast with a beautiful couple
Monday, October 21, 2013
What will you do when there is no internet / TV
Whenever I move home, getting a net connection is usually a nightmare for me.
Sunday, September 01, 2013
ராஜா தி ராஜா - இலண்டன் O2 இளையராஜா இசை நிகழ்ச்சி
மேற்கத்திய பாப், ஹிப் ஹாப் இசையும், வருடாந்திர ஏடிபி டென்னிஸ்சையும்
கண்ட பிரும்மாண்ட O2 அரங்கில் இன்று இளையராஜாவின் ராஜா தி ராஜா (Raja The Raja).இளையராஜாவே வழங்கும் இசை நிகழ்ச்சி என்பதால் எதிர்பார்ப்பும் ஆர்வமும் சற்று அதிகமாகவே இருந்தது.கமல் ஹாசனும் வர இருப்பதால் சொல்லவா வேண்டும்..?
பட்டு சேலை அணிந்த மங்கைகளையும்,ஜொலிக்கும் தேவதைகளையும், மழலை ஆங்கிலம் பேசும் (இல்லைங்க அது தமிழ் தான் !!) குழந்தைகளையும் ஒருசேர பார்த்த, டிக்கெட் சரிபார்க்கும் வெள்ளைக்காரர் சற்றே அசந்து தான் போனார்.
You may like When you get married
தன் ராஜாங்கத்தை ஜனனி ஜனனி-யில் தான் ஆரம்பித்தார்.சின்மயீ "அன்னக்கிளி உன்னத்தேடுது " இரண்டாவது சரணத்தை தவற விட, சரி செய்து பாட சொல்லி மேடையில் பாடுவதின் சிரமத்தை சொன்னார். ."கொடியிலே மல்லிகைபூ" சின்மயீயும் ,ஜெயச்சந்திரனும் பாடினார்.
ஷைலஜாவின் "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது" கேட்கும் பொழுது சிறுவயதில் ஆல் இந்திய ரேடியோவில் கேட்ட அதே இனிமை.
You may like ஷ்ராவனியின் டயரி
கார்த்திக் இரண்டு மூன்று பாடல்கள் தான் பாடினார்."என் இனிய பொன் நில்லாவே " அந்த மாலையின் இசை மயக்கம்.ஸ்வேதா மோகன் (சுஜாதாவின் புதல்வி)பாடிய "அடி ஆத்தாடி","மாங்குயிலே பூங்குயிலே" லயிக்க வைத்தன.
வசந்தா ராகத்தில் படைக்கப்பட்ட "அந்திமழை பொழிகிறது" ராஜாவுக்கும் பாடிய எஸ்.பி.பி-கும் அவர்களின் மேக்னம்ஓபஸ்களுள் ஒன்று.ராஜா, தான் அதில் தன் குருநாதர் டி.வி.கோபாலக்ரிஷ்ணனை ஹம்மிங் பாடவைத்தது பற்றி சொன்னார்.
அழும் குழந்தை போலத்தான் பாடல் கேட்டு செல்லும் நாங்களும், ராஜாதான் ஏன் குழந்தை அழுகிறது,அதற்கு என்ன வேண்டும் என்று பீடியாற்றிசியன் போல அறிந்து எங்களுக்கு என்ன மாதிரி பாடல் வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும் என்று சொன்ன கமல் அதற்கு உதாரணமாக "இஞ்சி இடுப்பழகா"
பிறந்த கதையை சொன்னார்.
"நான் தேடும் செவ்வந்தி பூவிது" ,"ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" ராஜா
பாடும் போது சொக்கித்தான் போனோம்.கிடத்தட்ட நான்கரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி இசை ஆளுமையில் ராஜா ஒரு ராட்சஸன் என்றார்.இல்லை தான் சரஸ்வதியின் பிள்ளை என்றார் ராஜா.
சரஸ்வதியின் பிள்ளை கடைசி பாடலாய் "தென்பாண்டி சீமையிலே" பாட்டின் மெட்டில் பாடியது.
"எங்கோர் மண்ணில் பிறந்தாலும் ,எங்கோர் மண்ணில் வாழ்ந்தாலும்,
உனையும் எனையும் இணைப்பதெல்லாம்,
உயிரின் மேலாய் இசை தானே.
உன்வாழ்வின் சிலநொடிகள்
என் வாழ்வின் சிலநொடிகள்
என்றென்றும் நினைவில் நிற்கும்
இன்நொடி தானே இன்நொடி தானே
என் இசை தானே
என்றென்றும் உமக்கெனவே
இசை கொடுப்பேனே "
Tuesday, January 29, 2013
Vishwaroopam - Movie Review
You may like When you get married
Camera showing the drops of water that falls from the ceiling in the warehouse when Kamal and his wife were interrogated by terrorists creates an ambience in the screen play to
You may like Oracle interview and eight queen problem
The cinematography is at its best when an Afghan teen-ager who was assigned the task by Omar to become a suicide bomber requests Kamal to push him in the swing.
You may like ஷ்ராவனியின் டயரி
Kamal sir, it is a treat to watch Vishwaroopam.
Wednesday, August 22, 2012
When you get married
I indeed listened carefully to the words of wisdom by my friends who were married for a long time about the do s and don't s.
It was Marks and Spencer, Camberly.People told that it is one of the biggest stores in UK and contains all the new collections and varieties.First mistake.We went in the morning just after having breakfast.She just skimmed through women's section and told me..
"Ennanga, let's start with cardigan/tops first, move on to jeans then shoes and finally to accessories section if we have time else we will shop for accessories in Central London,enna sollreenga"
Very systematic!
You may like Oracle interview and eight queen problem
She started browsing/selecting/going to trial room/asking my opinion--not necessarily in the same order.Then came a bouncer.
"Ennanga, does this dress look good"-pointing me to a model wearing a costliest clothing in the advert picture which I was looking.
You should tread carefully.You should understand the ambiguity in the question.The answer you give will have consequences which may potentially last for a very long time.
If you say, "It looks good for the model in the picture", odds are that you will not get good food for at least a week.
Neither should you ask," Do you mean, will it look good if you wear"
I gave an assuring smile and told her,"You should certainly try this.."
We had lunch in the cafeteria in M&S.
I was holding her three selected shirts and sitting in the only available cushion chair in front of the trial rooms section.I was about to stand to give the seat to a 60's something old man who came nearby clutching some clothes.He told me to sit.How nice of him.Seems he is also waiting for his wife.
He smiled at me and asked
"Waiting for your wife..?"
"Yes"
"Newly married...?"
"Yes"
Then he gave a (sarcastic)simper and said,
"Long way to go young man..."
The words still reverberate in my mind!
You may like ஷ்ராவனியின் டயரி
I rarely do my office work at home.It was one of those occasion when a super critical 4G LTE issue was escalated by our customer and starting from VPs to Directors to Senior managers were in the CC list of that mail.When I opened MS Outlook 2010 to update the thread, my wife came with a cup of tea and sat near me and looked at the mail.
I bragged her how critical the issue is, the importance of the job I am doing and told her that it is being followed up by our experts across the globe and showed her the mug shot pictures of people in CC who were involved, which comes in the reading pane of Outlook.Looks like she was not really impressed.
"Seems you guys botched up something big time and your customer is chasing you folks,And those mug shot pics..." Then she gave a pause,pondered and said,"Looks to me like the people responsible for this issue.. something like pictures of absconding criminals displayed in police station for a crime"
She then switched on the TV and started watching Big Bang Theory..
I think I should never do office work at home.
Sunday, July 22, 2012
Jessi J and Vijay TV awards
கிட்டதட்ட எல்லா பிரிவுகளிலும் ஆரண்ய காண்டம் நியமிக்கபட்டிருந்தது .
எங்கிருந்தது வந்தார் இந்த ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.முதல் படத்திலேயே எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.படம் பார்த்தவர்கள் எவ்வளவு பேர் அந்த ஆக்ரோஷ சண்டையுனோடு வரும் அந்த tempo கூடிக் கொண்டே செல்லும் பின்னணி இசையை கவனித்தீர்கள். போர்களத்தில் ரோஜா இதழ்களை காண்பிப்பது போல...what a (ironic) rendition.
சிறந்த பின்னணி இசை இந்த படத்திற்குதான்-ராஜாவின் புதல்வனுக்கு.அதே பின்னணி இசையை விஜய் அவார்ட்ஸ் teaser-க்கு பயன்படுத்தியிருந்தார்கள்.அந்த கொடுக்காபுளி,சுப்பு கதாபாத்திரங்கள் தமிழிற்கு புதிது.ஆணாதிக்க உலகத்தில் தான் அனுபவகிக்க நேர்ந்த வக்கிரங்களுக்கு அநாயசயமாக பழிவாங்கி, பணத்தை லவட்டி கொண்டு Best thing about a women is..it is a mans world என்கிறார் சுப்பு(யாஸ்மின் பொன்னப்பா). படம் பல் வேறு கோணங்களிலிருந்து நிதானமாக சொல்லப்படுகிறது.நம்ப ஊர் Quentin Tarantino என்கிறார்கள் தியாகராஜன் குமாரராஜாவை. சிறந்த திரைகதை விருது இவருக்கு தான்.நேரம் கிடைத்தால் பார்த்துவிடுங்கள்.
எங்கேயும் எப்போதும், ஆடுகளம்,கோ -இவை மூன்றும் நிறைய பிரிவுகளில் விருது வாங்கியிருந்தன.எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது.மேடையில் ஏ.ஆர்.ஆர் ,கமல், எஸ்.பி.பி . தன்னுடைய துறையில் வானத்தை தொட்டுவிட்டு மூன்று பேரும் ஏதும் அறியாதது போல சாதாரணமாக பேசினார்கள், கே.பி, பாலு மகேந்திராவும் அப்படியே.நிறை குடம்.
தென்னமெரிக்க மங்கைகள் நடனமாடினார்கள்.(இதை தான் டி வி நிகழ்ச்சிகளை அடுத்த லெவலுக்கு கொண்டுப்போவது என்பதா..?).அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்திற்கு சிறந்த விருதை நம்ப சிம்ரனிடம் இருந்து பெற்றார்.விஸ்வரூபம் டீசர் காட்டினார்கள்.படம் எப்போ கமல் சார்...?
சர சர சார காத்து, ஆரண்ய காண்டம்-BGM, யூ டியூப் -இல் தேடிக்கொள்ளுங்கள்.
ஜெஸ்சி ஜே அறிந்திராதவர்களுக்கு ..இதோ
Thursday, July 12, 2012
Olympics,Wimbledon,Euro 2012
Watching Germans playing against Greece in quarterfinals is a feast for the eyes.The way they do small passes and progress towards opponents goal-post and scoring the goal most resembles a group of highly skilled artists coordinating harmoniously to create a magnum opus.
Brazil/Argentina may play artistic foot-ball, but in the current form if there is a beauty in making passes, then Germany is the Sistine Chapel of football. Still wonder how they were beaten by the mediocre Italians in the semi's.
That Sistine Chapel thing..I did see that in Spain against Italy in Euro finals.Passes were of surgical precision. Spain taught Italy a lesson in counting...1,2,3 and 4.Spain is too strong a team for Italy. Germany Vs Spain in finals would have been a battle of equals. Seems Spain is the greatest team in the Europe/World.
Tuesday, July 12, 2011
Oracle interview and eight queen problem
It was not a pleasant morning.It was very hot and humid.Typical Madras. A saturday in mid November.The Metro bus we boarded from Velacherry to go to the Govt. public school near Mylapore was really crowded. The bus conductor scolded us in chennai slang for not buying tickets since we were in deep discussion on a topic and we forgot to buy ticket. Added to that,the frustration of not in a job was really high and the morale was not at its peak. And the debate was still inconclusive.. whether to go to Shajahan, the newly released Vijay movie or to take the written test for Oracle interview.Views are really polarised.Umanath,being Vijay fan, wanted to go to the movie. I am sure,the movie will not be good and at least wanted to take the written test.Ravi wanted to take the test.Jayaraj,Karumbayiram,Periyasamy and Rajesh will be joining us near the school. The first thing that hit us was the huge crowd that we saw infront of the school.More than thousand fresh graduates and everyone is there to get the job.The intake will be not more than 20. Odds are clearly stacked against us.I decided to support Umanath's plan.But the decision was finally made,Umanath and I were coerced to take up the test. It is me who came-up with a strategic plan to clear the written test.Jayaraj and Ravi will solve aptitude and C questions, Periyasamy and Rajesh will solve other sections in the test. Karubayiram,Umanath and I will co-ordinate marking-up answers among the group. Vithi valiyathu..!
Except me, all of my friends cleared the written test.
You may also like: ஷ்ராவனியின் டயரி The interview was scheduled in the afternoon in Sun centre in Eldams road and only the folks who have cleared the written test were allowed inside.But I was dragged to the big lobby by my friends since they needed morale support and some entertainment..! There were some 100-odd candidates shortlisted for interview and some half of them were seen in the big lobby. Can see people in different moods..anxious,stressed,deep thinking.. The mood in the hall was sombre. But not for us.All of my friends were kind of confident that they will not clear the interview and hence there is no fear. But, the topics ranged from how to spend the first month salary to where to party and commenting about the students coming out of the interview. There is only one feeling you have whenever you come out of any interview and that is sickness.I can see that in every one's face. But people coming from the interview panel situated near the main entrance door were more perturbed. Reason being..the question that is asked. How may possible ways you can arrange eight queens in the chess broad, with out each crossing the other! "Well,this is not fair.We never ever heard any question which is remotely related to chess in our curriculum"-this is me. "How is this related to the job"--Ravi. "Guys,this might be related to game theory and I have come-across this question somewhere,algorithm might be simple, I forgot"-Jayaraj "Logically speaking we cant have 8 queens in a chess board, I seriously question the validity of the question"--Rajesh "Folks, you were just one-step away from the job and now some silly question about some queens in a chess board..."-its me again.. "How am I supposed to answer some complex game theory question at the tender age of 21..? life is not at all fair"--Karumbayiram. Suddenly everyone is worried. Karumbayiram and Periyasamy were dumbstruck, while Umanath was seriously pondering over something which is really unusual given the circumstances. "Guys..relax..will find a solution,lets do it methodically.." Every one's focus is now on Umanath.I was not keen because I know him. "Arranging 8 queens, in a chess board..hmmm...interesting" Everyone nodded..!! "And there are 64 squares in the board..hmmm..guys,ever read of lateral thinking" And then he gave a pause,all of our eyes were on him.. "What if we say we don't know chess,never seen that board in our life time, interviewer will be in fix. we can skip that question.." There was a momentary silence,disbelief and then an instant elebration. Karumbayiram was the first to go and hug Umanath for his out-of-box thinking..! Even I am impressed.
You may also like: It is better to burn out than to fade away
Karumbayiram was the next to be called to the same "Eight queen"
interview panel..
After some 30 minutes..he came back..Saw Umanath with as much
menace as he could possibly muster.Didn't speak a word. We finally
pacified him and asked what happened so that we could correct
our mistakes.
"Aarambathula nalla thaan machhi poitirunthathu interview..."
"hmmm, then.."
"then he asked me that eight queen problem..I told them that I dont
know chess, even sweared to god that I dont know chess"
"appuram.."
"that fat guy in the panel told me that..there is no need to
know chess, assume there are 64 squares in a board,you can move a
piece of stone or wood in all possible directions,say horizontally,
vertically,diagonally.. now, the question is how many ways can you
arrange eight pieces in such a way that each piece doesn't cross
the other and asked me to write an algorithm.when I was about to swear
to god that I didn't understand, he told me that even his 2nd std
studying student can understand this question"
"then.."
"Then I came out"
Periayaswamy was the next to be called to the same panel.
You may also like: How to know you are in late 20's It has just stopped raining.The after-rain pleasant smell was there. There was a gentle breeze.It was a pleasant evening.We were sipping tea in a road-side tea-shop near Gemini flyover.Periyasamy told that we need to prepare to clear the interviews.Karumbayiram, Jayaraj and Periyasamy wanted to go to Anna university to stay in thier juniors hostel. Rajesh will be going to his home. Ravi,Umanath and I were planning to go to Ravi's anna's home in Velacherry. Everyone is waiting for the next bus to come. Everyone is waiting for the next interview to clear. Seems ppl do believe in hope. PS: Jayaraj cleared the interview and joined Oracle,Hyderabad.
Thursday, March 04, 2010
Saturday, September 19, 2009
ஷ்ராவனியின் டயரி
கல்யாணம் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான அனுபவம்,எனக்கும் அப்படியே.புதுக் கணவன்,புதிய உறவுகள்,புதிய அனுபவம் மட்டுமில்லாமல்,புதிய நாடும்.முதல் விமானப் பயணம்.புதுத் தாலி மஞ்சள் நிறத்தில் எடுப்பாக இருந்தது.மார்பில் பட்டு குறுகுறுத்தது.ஏர்போர்ட்டிலும் அம்மா அதையே சொன்னாள்.
"மூணாவது மாசத்தில் மறக்காம தாலிய கழட்டி மாத்தனும்டீ,சுகன்யாக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டல"
"இதோட பத்தாவது முறையா சொல்லிட்டமா, எனக்கு தெரியும்மா"
அப்பாதான் கண்கலங்கினார்.அம்மா அழுத்தமானவள்,எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்வாள்.
விமானத்தில் சீட் பெல்ட் போட்டுவிட்டான் ரகு.டேக்-ஆப் ஆகும் போது பயமாக இருந்தது.தன்னிச்சையாக ரகுவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டேன்.அன்னியோன்
இமிக்ரேசனில், அந்த வெள்ளைக்கார யுவதி,
"நியுலி மாரிட்?, யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் அட்டயர்",
என்றாள்.வெட்கப் பூரிப்பில் தாங்க்ஸ் என்றேன்.
அரை மணி நேர கார் பயணத்திற்கு பின், அமைதியான சப்-அர்ப்பில்,ஓடு வேயப்பட்டஅழகான வீட்டின் முன் கார் நின்றது.ரகு தான் வீட்டை திறந்தான்.சூட்கேஸ்களை எடுத்துவந்தான்.நான் பிரமித்து நின்றேன்.அப்படியே கைகளை கட்டிக்கொண்டு, புதுக் காற்றை சுவாசித்தேன்.சூரியனின் இளஞ்சூட்டையும்,குளிரையும் ஒருசேர ரசித்தேன்.
பிப்ரவரி மாதத்தின் அழகான ஒரு மாலைப் பொழுது அது.வரவேற்க உற்றார், உறவினர் இல்லை.ஆரத்தி எடுக்க யாரும் இல்லை.
"வெல்கம் புதுப்பொண்டாட்டி.இது தான் நீ இருக்கப் போகும் குட்டி அரண்மனை"-என்று அரண்மனை சேவகன் போல் தலை சாய்த்து வரவேற்றான்.வலது கால் எடுத்து வைத்து நுழைந்தேன்.இந்த... இந்த... தருணம் சந்தோசமானது. எல்லா புதுப்பெண்ணும் இ ந்த தருணத்தின் இனிமையை நிச்சயம் அனுபவித்து இருப்பீர்கள்!!
புதுப்புடவை சரசரக்க,கை வளையல் சிணுங்க,புதுத்தாலி மார்பில் அழுந்த,என்னை இழுத்து,அணைத்து ஆத்மார்த்தமாக நெற்றியில் முத்தமிட்டு,காதலுடன் உதட்டைக் கடந்து, அப்புறம் அந்த புதுத்தேடலை,அந்த புது அனுபவத்தை,கொஞ்ச கொஞ்சமாய்...இந்த தருணத்தையும்....!!உடை சரி செய்துக் கொண்டு,ரகுவிடம் இருந்து விடுவித்துக்கொண்டு, சாளரம் திறந்து அழகான தோட்டத்தை ரசித்தேன்.பெயர் தெரியாத அந்த பறவை "கீச் கீச்" என்று என்னை அழைத்தது.சந்தோசம் திகட்டியது.அதிகாலை வானத்தை ஓவியமாக வரைந்தது போல்,வாழ்க்கை அழகாக இருக்கிறது.
"ஷ்ராவனி, உனக்காக நான் போட்ட முதல் காஃபி"-என ஒரு கோப்பையை என்னிடம் நீட்டினான்.
ரகு அலுவலகம் சென்றவுடன்,வீட்டை சுத்தம் செய்வேன்.வீட்டிற்கு அம்மாவிடம் போன் பேசுவேன்,தஞ்சாவூரில் இருக்கும்,சுகன்யா அக்காவிடமும்,சாஹம்பரியிடமும் பேசுவேன்.கொஞ்சம் டிவி பார்ப்பேன்.கொஞ்சம் அழுவேன்.
வார விடுமுறையில் லண்டன் முருகன் கோவில் போவோம். முருகனிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டு உயிர் எடுப்பான்.இரவு ஈஸ்ட் ஹாம் சரவண பவனில் சாப்பிடுவோம்.ரகுவிற்கு பிடித்தது எது,பிடிக்காதது எது என கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துக்கொள்கிறேன்.காரில் போகும் போது "உன் சிரிப்பினில்"-பச்சைகிளி முத்துச்சரம் பாடல் ரசித்துக் கேட்கிறான்.அடிக்கடி என்னைப் பார்த்து முணு முணுக்கிறான்.எண்பதுகளில் வந்த இளையராஜா பாடல் விரும்பிக்கேட்கிறான்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வரும் ராகிணிஸ்ரீ-யை ரசிக்கிறான்.அவள் உன்னை விட அழகு என என்னை வம்பிற்கு இழுக்கிறான்.மான்செஸ்டர் யுனைட்டட் அணியை சப்போர்ட் செய்கிறான்.சில சமயம் கொஞம் பியர்.கார்டன் ராம்சே சமையலையும்,எக்ஸ்-பேக்டார் நிகழ்ச்சிகளையும் அவனுடன் சேர்ந்து நானும் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
சிலசமயம் அவனுடைய நெருங்கிய நண்பர்களின் பார்ட்டிக்கு அழைத்து செல்கிறான்.டான்ஸ் ப்ளோரில் எல்லோருடனும் டான்ஸ் ஆடுகிறான்.ஒருமுறை,தனியே நின்று அவனை ரசித்துக்கொண்டிருந்த என்னை , இழுத்து,இடை பற்றி, அந்த மங்கிய வெளிச்சத்தில்,மனோகரமாய் சிரித்து,காதருகே கிசுகிசுத்தான்,
"ஷ்ராவனி உன்னைப் போல் அழகான ஒரு பெண் குழந்தை வேண்டும்", என்று.
இது ஏகாந்தம்.இது எனக்கு வாழ்வின் உன்னதம்.
பாரதி சொன்னது போல எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!
நான் லண்டனில், எனது கணவனோடு சந்தோஷமாகவே இருக்கிறேன்.என்னை விட்டு பிரிந்த காதலனும்,அவனது மனைவியோடு சந்தோஷமாகவே இருப்பான்.ஏறக்குறைய சந்தோஷமாகவே இருப்பான்!!
You may read the slightly edited version in Youthful Vikatan
http://youthful.vikatan.com/youth/Nyouth/senthilkumar17092009.asp
Thursday, August 13, 2009
How to know you are in late 20's
Thursday, July 02, 2009
It is better to burn out than to fade away
The sheer attraction of the numbers,the demi god status the Beatles enjoyed
during their hey days even though there is nothing called as internet made me
to visit The Beatles Mueseum in Liverpool.There seems to be always an idiosyncrasy
associated with artistic geniuses.Although I really cant imagine the state of mind
John Lennon was when he said, "we(Beatles) are bigger than christ",seems its true
fame can make you go crazy.When you can make the worlds powerful man and
woman your fans and make people cry in hysteria,you seem to be in a unique
state of mind. When a reporter asked him how he expected to die, he replied,
'I'll probably be popped off by some loony.' Two decades later,he was killed by
a deranged person outside the Dakota building in New York at the age of 40.
I remember Subramanya Bharathi's Yoga Mandiram
"....Kilaparuvameithi....pala veedikkai manitharai poole naan veelven endru ninaithaya"
and Kurt Cobain's suicide note,"It is better to burn out than to fade away"
Read the above lines once again.Got the sub-text?
Both the geniuses died young.
Micheal Jackson..??
Okaay.
I used to watch many TV programs regularly..but many of them kind of dropped off my radar.
Lost interest in Vijay TV's Super singer after Raginisri's elimination,
but kept watching since I liked Prasanna,Karthick and Renu.
Now-a-days, I make it a point to watch Neeya Naana program in Vijay TV.
I like Gopinath's tamil.Anbu vanakkangal,nenchaarntha nandrikal.Sweet.
The production team seems to have the talent of choosing very interesting topics
for discussion.Last week it was..How the family members will behave/be...
when appa is at home and when he is not at home.
It was very interesting to watch...as usual.I was laughing all through the program.
We can identify ourself in many of the points that were discussed.
By the way who is that beautiful senorita in rose color Chudithaar...!!
Happen to watch a YouTube video.Was mesmerised by the music.
Although I cannot really understand the kannada lyrics,the song was
really really awesome.The 1980's streets and landscape of bangalore...
the stylish subtle romance captured in the song sequence..guess what..
this is Maniratnam's first movie,music composed by..who else..
God of Music.
Folks,"Naguva nayana" from Pallavi Anu pallavi movie for you....
Monday, June 15, 2009
3G
வேலைக்கு பின் மாலை ஆர்.எஸ் புரத்தில் ஷாப்பிங் முடித்து, பக்கத்தில் எந்த நல்ல உணவகம் இருக்கும்
என தேடுகிறீர்கள்.இங்கே உங்களிடம் ஒரு 3G போன் இருந்தால் அது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து
பக்கத்தில் இருக்கும் ஹோட்டல்கள்,அங்கிருக்கும் மெனு கார்டு முதல் நீங்கள் செல்ல விரும்பும் ஹோட்டல்
எவ்வளவு தூரத்தில் இருக்கிறது போன்ற விவரங்களோடு அதற்கு செல்லும் வழியையும் காட்டும்.
நீங்கள் உலாவி(browser) கொண்டு தேடியந்திரம்(search engine) மூலம் தேடத்தேவையில்லை.
3G போனில் அதற்குறிய ஐகான் -யை க்ளிகினால் போதும் பக்கத்தில் இருக்கும் அனைத்து ஹோட்டல்களின்
மேற்சொன்ன விவரங்கள் உங்கள் தொடுதிரையில் கண் சிமிட்டும்.
இது 3G எனப்படுகிற மூன்றாம் தலைமுறை செல்போன்களின் மாயாஜாலங்களில் ஒன்று.
இந்த சேவை ஹோட்டல்களோடு நில்லாமல் மருத்துவமனைகள்,சினிமா தியேட்டர்கள்,பெரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வங்கிகள் வரை பொருந்தும்.அவசர மருத்துவ சிகிச்சைக்கு
3G போனில் அதற்குறிய ஐகான் -யை சொடுக்கினால் மிக அருகில் இருக்கும் மருத்துவமனையின் தொலைபேசி எண் முதல் அதற்கான வழித்தடத்தையும் காட்டும்.
நாம் தற்போது பயன்படுத்தும் செல்போன்கள் GSM(Global System for Mobile communications)-எனப்படுகிற இரண்டாம் தலைமுறை 2G தொழில் நுட்ப வகையச் சார்ந்தது.
இதையே சற்று மெருக்கேற்றி இன்டர்நெட் பயன்படுத்த உதவும் GPRS(General packet radio service) எனப்படும் 2.5G தொழில் நுட்பத்தை கொண்டுவந்தார்கள்.
தற்போது அறிமுகப்படுத்தப் படும் 3G, WCDMA(Wide band Code Division Multiple Access) தொழில் நுட்ப வகையைச் சார்ந்தது. GSM 2G-யில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு அலைவரிசையில் ஒரு கால அளவு ஒதுக்கப்படும். 3G WCDMA-வில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதே அலைவரிசையை பயன்படுத்தினாலும் ஒவ்வொரு இலக்கம்(code) ஒதுக்கப்படும்.
டில்லி-யில் MTNL எற்கனவே 3G-யை சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் BSNL கடந்த பிப்ரவரி மாதத்தில் 3G-யை அறிமுகப்படுத்தியது. நோக்கியா,சாம்சங்,மொடோரொலா,சோனி எரிக்சன்,எல்.ஜி போன்ற கம்பனிகள் தற்போது பெருமளவில் 3G போன்களை விற்பனை செய்தாலும், ஆப்பிளின் 3G ஐ-போன் அதனுடைய சிறப்பம்சம்களுக்காக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உங்களது 3G போன், 3G சேவை இல்லாத இடத்தில் 2G தொழில் நுட்பத்தில் வேலை செய்யும்.
3G வழங்கும் மற்றுமொரு வியத்தகு சேவை வீடியோ டெலிபோனி.இனி நண்பர்கள் வீட்டில்
கம்பைன் ஸடடி என பொய் சொல்லி ஊர் சுற்றுவது கடினம்,ஏனென்றால் 3G போனில்
எதிர்முனையில் இருப்பவர்களின் முகத்தையும் சுற்றுபுறத்தையும் கேமரா வழியே பார்த்துக்கொண்டே பேசலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில்(Live) பார்க்கும் வசதி, FM ரேடியோ,அதி நவீன வீடியோ கேமரா, சினிமா போன்றவற்றை சேமித்து பார்க்கும் வசதி,GPS(Global Positioning System) எனப்படும் வழிகாட்டும் கருவி,14.4 Mbps வேகம் வரை தரவிறக்கம்(download) செய்யும் வசதி(BSNL தற்போது வழங்குவது அதிகபட்சம் 2 Mbps) மிகத்துல்லியமான தொடுதிரை வசதி,பயனாளர்கள் எளிதாக உலாவக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து மினி கம்ப்யூட்டர் போல் செயல்படும் மூன்றாம் தலைமுறை மொபைல் போன்கள்
மக்களை நிச்சயம் ஈர்க்கும்.
You can see this article in last week's kumudam magazine.
Monday, December 01, 2008
அழகிய இரக்கமற்ற பெண்ணே..!! Part 4
சமீபகாலமாக, ஆஹா FM கேட்பதிலிருந்து மாறி,வெறும் தெலுங்கு
பாடல்களா பாலு கேட்டுக்கொண்டிருந்தான்.
"கிரிக்கெட் மாட்ச் பார்க்காம, அதிசயமா சனிக்கிழமை ஆபிஸ்-ல என்னடா பண்ணற"
"பாஸ், எங்க தல கங்குலி ரிட்டயர் ஆனதிலிருந்து, ஐ ஸ்டாப்டு வாட்ச்சிங் கிரிக்கெட்"--னு சொல்லிட்டு ஐந்தாவது முறையாக ஏதோ "நுவு நுவு"-னு தெலுங்கு பாட்டு பாடினான். "என்னடா ரொம்ப சந்தோசமா இருக்கிற" "பாஸ்,சந்தியாவுக்கு இன்னைக்கு பர்த்டே,காலைல தான் சர்ப்ரைஸ் கிப்ட் அனுப்பி, விஷ் பண்ணேன்" La Belle Dame Sans Merci..!! Part 1 "எப்படிடா கண்டுபிடிச்சே உண்மையான பர்த்டே-ய,என்னடா தில்லாலங்கடி வேலை பண்ண " "பாஸ்,Paulo coelho என்ன சொல்றார்னா,when a person really desires something, all the universe conspires to help that person to realize his dream, மெதொடிகல் அப்ரோச் பாஸ், சந்தியாவோட உண்மையான பர்த்டே யாருக்கு தெரியும்" "ம்ம்ம்..அவ அப்பா, அம்மா,கூட பிறந்தவங்க,இல்லனா அவ பிரண்ட்ஸ்" "சரி,அவ விட்டுக்கு கால் பண்ணி, அவளோட தம்பி கிட்ட, நாங்க ICICI-ல இருந்து கால் பண்றோம்,வெரிபிகேஷனுக்காக,உங்க அக்காவோட உண்மையான டேட் ஆப் பர்த் சொல்லுங்கனு கேட்டேன், பையன் அப்பாவி பாஸ், அம்மா கிட்ட கேட்டு, கரெக்ட்டா சொல்லிட்டான்" அழகிய இரக்கமற்ற பெண்ணே..!! Part 2 "வீட்டு போன் நெம்பர் தான் டேடாபேஸ்ல இருக்காதே, எப்படி கிடைச்சுது" "அது சிம்பிள் பாஸ்,சந்தியாவ பாலோ பண்ணி அவ வீட்டு அட்ரெஸ கண்டுபிடிச்சேன்,அப்புறம் karnataka.bsnl.co.in-ல அட்ரெஸ குடுத்தேன், அவ அப்பா பெயர்ல ரெஜிஸ்டர் ஆகியிருக்கிற வீட்டு நெம்பர கரெக்ட்டா குடுத்துடிச்சு,பிஎஸ்என்எல் வாழ்க" " நீ திருந்த மாட்டடா, எப்ப உனக்கு ட்ரிட் தர போறா" "இன்னைக்கு ஈவினிங்" சனிக்கிழமை பிற்பகல்.வினய் பற்றிய சோகம் அலுவகத்தில் மறக்கப் பட்டிருந்து. "எப்படிடா வினய்-வோட கேர்ள்பிரண்ட் சுதா-வ தெரியும்" "வினய் புதுசா சேர்ந்ததால, அவனோட இன்கமிங்,அவுட்கோயிங் மெயில செக்குரிட்டிக்காக கொஞ்சம் படிக்கவேண்டியதா இருந்தது, சுதா-னு சொல்லிட்டு ஒரு பொண்ணுகிட்ட இருந்து மெயில், அதும் நம்ப காம்பிடிங் கம்பனில வேலை பண்றா,ஆனா நோ டிரான்ஸ்பர் ஆப் கான்பிடன்ஷியல் இன்போ,பட் "யூ ஆர் மாஸ்குலைன்,ஐ வாண்ட் யூ",மாதிரி நிறைய மெசெஜஸ்" அழகிய இரக்கமற்ற பெண்ணே..!! Part 3 அப்ப தான் பாலு போன் சிணுங்கியது...பேசிவிட்டு சொன்னான். "பாஸ், நஞ்சுண்டப்பா வரார்.வினய் மர்டர் கேஸ் சால்வ் ஆயிடுச்சாம்" "என்னது?" நஞ்சுண்டப்பா வந்தவுடன் நாங்களும் கார் பார்க்கிங் சென்றோம். "என்ன சார், சுதா எல்லாத்தையும் ஒத்துக்கிட்டாளா" "சுதா இல்ல பாலு,ப்ரீத்தியையும்,அவ காதலன் நவீனையும் அரெஸ்ட் பண்ணியிருக்கோம்,முதல்ல சந்தேகத்துல தான் அரெஸ்ட் பண்ணோம், அப்புறம் ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டாங்க" "என்ன சார் சொல்றீங்க,ப்ரீத்திக்கு காதலனா,எப்படி கண்டுபிடிச்சீங்க?" "ரிலாக்ஸ்"-என்றவர் தொடர்ந்தார்," ரிங் ரோட்ல இது நடந்து இருக்கு,மோட்டிவ் நிச்சயம் பணம் இல்ல, ஏன்னா வந்து அடிச்சவங்க எதுவும் திருடல,ப்ரீத்தியும், வினய்-யும் அந்த இடத்துக்கு இரவு 7:45க்கு வந்து இருக்காங்க, நவினும் அவன் பிரண்ட்ஸும் வந்து அடிச்சது, சம்வேர் பிட்வீன் 8:00 அண்ட் 8:30" " நவீன எப்படி புடிச்சீங்க,கதைல அவன் எங்க வந்தான்" "கதைல அவன் ஆரம்பத்துல இருந்தே இருக்கான்,அவன் தான் எல்லாத்தையும் பிளான் பண்ணியது, நவீனும், ப்ரீத்தியும் காதலிக்கறது ப்ரீத்தி வீட்ல பிடிக்கல, ஸோ சொந்தகார பையன் வினய்-யை ப்ரீத்திக்கு நிச்சயித்துயிருக்காங்க, வினய்-கும் இந்த காதல் நல்லா தெரியும், ஆனா ப்ரீத்தி மேல வினய்-க்கு மோகம்ககிறதால, இவனும் ரொம்ப ஆசைபட்டுயிருக்கான்,அதுக்கப்றம் வினய் ப்ரீத்தியை ரொம்ப தொந்தரவு பண்ணியிருக்கான்.." "அதுக்காக கொலை பண்றதா" "இல்ல,சும்மா கொஞ்சம் தட்டி மிரட்டுலாம்னு தான் இவங்க பிளான்,அதனால தான் ப்ரீத்தி வினய்-யை அங்க கூட்டிட்டு வந்திருக்கா,ஆனா அது விபரீதமாகி, ஹெட் இன்ச்சூரிஸ்-ல வினய் செத்து போய்ட்டான்" "சரி, நவீன எப்படி சந்தேகப்பட்டீங்க" "Modus operandi, மெதொடிகல் அப்ரோச்,பொதுவா உலகத்துல நடக்குற இந்த மாதிரி க்ரைம்க்கு காரணம் ஒண்ணு பணம்,காதல், இல்லனா பழிவாங்கல். இதற்கு மோட்டிவ் நிச்சயம் பணம் இல்ல.ஸோ காதல்/பழிவாங்கல். போஸ்ட் மார்ட்டம் ரிபோர்டும் 8:00 - 9:00-குள்ள நடந்திருக்குன்னு சொல்லுது. ஸோ, சம்பவம் நடந்தன்னைக்கு ஈஜிபுரா சிக்னல், அப்புறம் சோனி வோர்ல்ட் சிக்னல்ல டிராபிக் ரூல்ஸ் வயலேஷன்ஸ்/லைசன்ஸ்க்காக 7:45 இருந்து 9:00 வரை சார்ஜ் ஷீட் பண்ண டூ வீலர்,போர் வீலர் எல்லாரையும் சார்ஜ் ஷீட்ல இருந்த அட்ரேஸ வெச்சி தேடி கண்டுபிடிச்சி விசாரிச்சோம்" "அப்புறம்.." "இரண்டு மூனு பேர், அந்த 8 - 8:30 நேரத்துல அந்த ப்ரிட்ஜ் பக்கம், ஒரு போர்ட் எண்டீவர பார்த்திருக்காங்க, ஆனா மறுபடியும் இரண்டாவது முறையா ப்ரீத்திய விசாரிச்சதுல அவ அடிச்சவங்க டூ வீலர்ல வந்தாங்கன்னு சொன்னா, அப்பவே அவ மேல கொஞ்சம் சந்தேகம்.அப்புறம் திங்ஸ் ஆர் இஸி.. அவளோட மொபைல் போன் கான்வர்ஷேஷன்ஸ்,சிட்டில போர்ட் எண்டீவர் வெச்சியிருக்கவங்க ரொம்ப கம்மி,அவங்கள விசாரிச்சோம்,அதுல ஒருத்தன் இந்த நவீனோட ப்ரண்ட்.ஸோ....ஒன் ப்ள்ஸ் ஓன் இஸ் டூ....அப்புறம் இந்த நவீனையும்,ப்ரீத்தியையும் தனியே கொஞ்ச நேரம் விசாரிச்சோம், ரொம்ப நேரம் தாங்கல,சொல்லிட்டாங்க" "அப்ப ஹாஸ்பிடல்ல அழுதது எல்லாம் நீலிக் கண்ணீரா" "இல்ல அவ அழுதது உண்மை, ஆனா அழுதது வினய்-க்காக இல்ல இந்த நவீனுக்காக.." "அடிப்பாவி.." "சரி நான் கிளம்புறேன்..." "எங்க சார், கோரமங்களா பக்கமா" "ஆமா.." " நான் வண்டி கொண்டுவரல,போரம்ல டிராப் பண்ணிடுங்க, ஒரு டிரிட் இருக்கு" "யாரு பாலு.."-இது நஞ்சுண்டப்பா பாலு கண் சிமிட்டினான். " நீ திருந்த மாட்டடா..." (முற்றும்) இந்த தொடர்கதையை அதிகாலை.காம் இணையதளத்திலும் படிக்கலாம் http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7765&Itemid=164