Friday, January 09, 2009

இலங்கை விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை..!

போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ஆதரவு வாபஸ்-னு சொல்லி நாடகத்தை ஆரம்பித்த தமிழினத் தலைவர்,
மனிதச்சங்கிலி, நிதிதிரட்டுதல் என நம்பவைத்து,பின்னர் ப்ராணாப்யை அனுப்புகிறோம் என கழுத்தறுத்து
கிளி நொச்சி வீழ்ந்தபின், டி.ஆர்.பாலு(திலீபன் தன் ப்ளாகில் சொன்ன மாதிரி,வடிவேல் சிரிப்பு போலிஸ்-னா இவர் சிரிப்பு மந்திரி) மூலமாக,"அவர்கள் விருந்துக்கு அழைக்கவில்லை,அதனால நாங்க ப்ராணாப்யை அனுப்பவில்லை" என வாய் கூசாமல் தமிழர்களை கேவலப்படுத்தினார்கள்.

அடுத்து காங்கிரஸ்.இழவு வீட்டில் பிணத்திலிருந்து திருடுவதற்கு ஈடான செயல் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்(?) செய்தது. தமிழ்குரல்-னு ஒரு ப்ளாகர் சொன்னமாதிரி,சிங்கள தூதர் அம்சாவினால்,"கொடுத்த காசுக்கு மேல கூவறான்டா கொய்யால"-னு சொல்ற அளவுக்கு வேலூர் ஞானசேகரன் புகழ் பெற்றவர்.காங்கிரஸ் மேலிடத்திடம் நல்ல பேர் வாங்க எந்த கீழ்த்தரமான
செயலையும் செய்ய தயாராக இருக்கும் தலைவர்களைக் கொண்ட த.நா காங்கிரஸ்.அதன் தற்போதைய தலைவர் தங்கபாலு பற்றி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!!. நீங்க இத படிச்சாலே போதும். இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு தமிழர்கள் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டி இருக்கிறது.அப்புறம் ஆயுதம் கொடுக்கவில்லை என சொந்த நாட்டு மக்களிடமே
பச்சை பொய் சொல்லும் காங்கிரஸ் பிரதமர்.இந்த காங்கிரஸ்காரர்கள் எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களிடம் ஓட்டு கேட்கப்போகிறார்கள்? காஸாவில் இஸ்ரேலை கண்டிக்கும் இந்தியா பக்கத்தில் தினம் தினம் அனாதைகளாக கொல்லப்படும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை...இது எல்லாம் எந்த ஊர் நியாயம் என நினைத்துக் கொண்டேன்,பிறகு தான் தெரிந்தது
ஈழத்தமிழர்களை கொன்று,போரை முன்னின்று நடத்துவதே காங்கிரஸ் கட்சிதான் என்று.துரோகத்துக்கும் மேல் தமிழில் வேற ஏதாவது வார்த்தை இருக்கிறதா?

ஆனையிறவு வீழ்ந்தது என RAW செய்த பொய் பிரச்சாரத்தை அப்படியே வெளியிடும், ஈழப்போராட்டத்தை பற்றி அரைவேக்காட்டுத்தனமான அறிவு கொண்ட ibnlive,rediff. சொந்தமாகவே பொய் பிரச்சாரம் செய்யும் Hindu,தினமலர் வகையறாக்கள்.உயிரிழந்த பெண் போராளியை துவம்சம் செய்யும் சிங்கள வெறியர்கள்,ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை, கிளி நொச்சியின் வீழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய வஞ்சகம் மிக்க காங்கிரஸ்...இதையெல்லாம் பார்த்து ஏதும் செய்ய முடியாமல்
தலைகுனியலாம்.


அல்லது....


1.வரும் தேர்தலில் ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்களுக்கு ஓட்டு போடலாம்.
2.முடிந்தவரை உற்றார்,உறவினர், நண்பர்களுக்கு இந்த இனப்படுகொலையை
நடத்தும் தமிழ் துரோகிகளை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தாலாம்.(இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்)
3.பழ. நெடுமாறன்,வைகோ,திருமாவளவன் போன்றவர்களின் போராட்டத்தை ஆதரிக்கலாம்.
4.வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இலங்கை தூதரகத்தின் முன்னால்
கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தலாம்.
5.சமீபத்தில் IT துறையினர் சென்னையில் ஈழ ஆதரவு போராட்டம் ஒன்றை 
நடத்தினார்கள். அவர்களிடம் கந்தாலோசிக்கலாம்

எனக்கு தெரிந்து ஈழம் பற்றி தொடர்ந்து எழுதும் பதிவர்கள்
Mike,
மதிபாலா(baluindo.blogspot.com),
மெல்போர்ன் கமல், 
Namakkal சிபி(pithatralgal.blogspot.com),
ஜோதிபாரதி(jothibharathi.blogspot.com),
முரளி(vayal-veli.blogspot.com)
திலீபன்(dilipan-orupuratchi.blogspot.com)
வரவனையான்(kuttapusky.blogspot.com)
அறிவிழி,
களப்பிரர்(tamilkuruthi.blogspot.com)
நாம் வேறு என்ன செய்யலாம் என்பது பற்றி சொல்லலாம்.

மற்றவர்களும் உங்கள் கருத்தினை சொல்லலாம்.

What say guys..???

4 comments:

murasam said...

http://www.swissmurasam.net/news/breakingnews-/11204--5-.html

Anonymous said...

தூ! துப்புக் கெட்ட பாலு!!

Sen said...

http://www.swissmurasam.net/news/breakingnews-/11204--5-.html

No prominent coverage is seen in international media.

International media under-reports the
genocide that is happening in SL.
It is turning a blind-eye..:-(

Anonymous said...

porampokku congress karanunga, thangabalu kena paadu

Post a Comment

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz

Blog Widget by LinkWithin