Wednesday, November 08, 2006

Mid career crisis.

இந்த மென்பொருள் எழுதுபவர்கள் தனி கூட்டம் போல.
வாழ்வின் சுகங்களை சீக்கிரம் ருசிக்க முடிகிறது போல.
முப்பது வயதை தொடுவதற்குள் upper middle class
வாழ்க்கை,கைக்கு எட்டும் தூரத்தில் வெளி நாட்டுப் பயணம்,
cutting edge,3G wireless-ல் வேலை செய்கிறேன்
என்று தெரிந்தவர்களிடம் ஜல்லி அடிக்க போதுமான
டெக்னாலஜி அறிவு, awesome,cool,core competency
என்று கலந்தடிக்க போதுமான பேச்சு திறன்,
அப்புறம் Pulsar-ல் அமர்திக்கொண்டு Forum, PVR ,INOX
என்று ஊர் சுற்ற ஒரு தேவதை,இது கிட்டாத
பாவப்பட்ட ஜென்மங்களுக்கு, நண்பர்களுடன்
கொண்டாட இருக்கவே இருக்கிறது Kingfisher,Vodka..
வேறென்ன வேண்டும்.இது தான் சொர்க்கம்! பேரின்பம்!!

இப்படி தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்!
எல்லாமே சீக்கிரம் கிடைத்துவிட்டால் சுவாரஸ்சியம்
போய் விடுகிறது போல. சில பொழுதில்,தனிமை-இல்
இருக்கும் போது,what next-?னு ஒரு கேள்வி வரும்.
ஒரு வித நிலைகொல்லாமை, restlessness.
எல்லாமே இருந்தும், ஏதோ இல்லாத மாதிரி.
S.J.சூர்யா சொல்ற மாதிரி இருக்கு,ஆனா இல்ல.
நாம் வாழ்க்கையில் சரியான பாதையில் தான்
செல்கிறோமா என்று ஒரு திடீர் சந்தேகம்.

என் நண்பனிடம் இது பற்றி சொன்னால்,உனக்கு
கேர்ள் ப்ரண்ட் இல்ல மச்சி,அதனால தான் இப்படி
எல்லாம் பேசுர...முடிந்சா யாரயாவது தேத்த பாரு
என்று அவன் வேற வெறுப்பேற்றி விட்டு சென்றான்.

கார்ப்பரேட் உலக்கத்தில் இதை Mid career crisis
(யாராவது இதை தமிழ் படுத்தலாம்) என்கிறார்கள்.
முப்பதுகளின்(அகவை) ஆரம்பத்தில் வரும் என்கிறார்கள்.
நம்ப ஊர் IIM-இல் இது பற்றி கேஸ் ஸ்டடி செய்கிறார்கள்.
முப்பதுகளில் வரும் இந்த நிலைக்கொல்லாமையை
சிலர் நல்லது என்கிறார்கள்.இதனால் நம் மனது நாம்
செய்யும் அன்றாட வேலை-யை விட்டு வேறு ஏதவாது,
நம்மிடம் ஓளிந்திருக்கும் திறமையை
வெளி கொணரும் என்கிறார்கள். நம்மிடம் ஒருவித
தேடல் தோன்றும் என்கிறார்கள்.ஸ்டீவ் ஜாப்ஸ், 1970-களில்,
இந்தியாவில் சுற்றி திரிந்தது கூட இந்த தேடல் தானோ?

கடைசியாக, அந்த Mid career crisis-ல்
இருந்து விடுபட நமக்கு பிடித்தவற்றை
செய்யலாம் என்கிறார்கள்.கிட்டார்
வாசிக்கலாம்,கவிதை கூட எழுதலாம்,இல்லா
விட்டால் சன் ம்யுசிக்-கில் சந்தியா-வை
ரசிக்கலாம்(இது நம்ப ஐடியா.!!).

நண்பனிடம் ,"கவிதை எழுதலாம்னு இருகேன்டா"-என்றேன்.

"ஓ அப்படியா ...!! ம்ம்ம் எங்க ஒண்ணு சொல்லு
பார்கலாம்"-என்றான் ஏற இறங்க பார்த்துக்கொண்டு.

"உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகலாய்......"

"ஏய் நில்லு நில்லு....இது ஏற்கனவே வைரமுத்து சார்
"இருவர்" படத்துக்காக எழுதினது"

"ஓ அப்படியா...சரி! இது எப்படி இருக்கு.."

"மூங்கில் இலை மேலே தூங்கும் பனிதுளியே
தூங்கும் பனிதுளியை வாங்கும் கதிரோனே..!!"

"சூப்பரா இருக்கில்ல..கவிதையில சையின்ஸ்-லாம்
இருக்கு பாரு ....எப்படி ??"--இது நான்.

"இது யாருதுனு தெரியல...
ஆனா கண்டிப்பா உன்னுது இல்ல"--இது என் நண்பன்.

"சரி கடைசியா....ஒண்ணு....
உலகம் போற்றும் கவிதை எழுத நினைத்தேன்,
வான் போற்றும் காவியம் வடிக்க நினைத்தேன்,
யாரிந்த பாரதியும்,வைரமுத்துவும்,சுஜாதவும்,
நான் எழுத நினைத்ததை முன்னமே எழுதி இருக்கிறார்கள்!!"

"ஸ்டாப் இட்"

இப்பொழுதெல்லாம் அவன் என்னிடம் கவிதை
பற்றி பேசுவதில்லை.

எனக்கு sun music-ல் சந்தியாவை ரசிப்பது தான் சரி...

Thursday, September 21, 2006

செவப்பு சட்டை,மஞ்சள் சட்டை

எனக்கும் Murphy's law-கும் எப்பவும் ரொம்ப அ ந் நியோன்யம் உண்டு.
எப்பவும் நான் காதலிக்கிற பெண்களுக்கு தான் சீக்கிரம் கல்யாணம் ஆகும்.
நான் ஏறுகிற பேருந்து தான் break down ஆகும்.இப்படி நிறைய...
Fine, இந்த கதை நான் காதலித்த தேவதைகளைப் பற்றி அல்ல...!

வழக்கம் போல கிருஷ்ணகிரி-யில் பேருந்து மாறி, பெங்களூர்
செல்லும் பேருந்தில் ஏறினேன். பக்கத்தில் செவப்பு சட்டையும்,
மஞ்சள் சட்டையும் அணி ந்த இரண்டு பேர் அமர் ந் தார்கள்.
இளைஞர்கள்.பெங்களூரில் மேஸ்திரி,கார வேலை செய்பவர்கள் போல.

"ட்ரைவர் சார் படம் போடு சார்"--இது செவப்பு சட்டை.

"ஆமா சார், விக்ரம் படம் போடு சார், என்ன மாப்ல நா சொல்லரது"---இது மஞ்சள் சட்டை.

"ஆங்"

"என்ன மாப்ல ட்ரைவர் கண்டுக்கவே மாட்ராரு"

"இது ஆவரது இல்ல மாப்ல"

பேருந்து புறப்பட்டது.ஒழுங்கா தான் போயிட்டிருந்தது.

கிட்டதட்ட ஓசூர்-அ நெருங்கி கொண்டிருந்தது.

"என்னப்பா யாரும் டிக்கடே வாங்கலே"--பின்னாடி இருந்து ஒரு குரல்.

"கண்டக்டர் எங்கப்பா"

"என்னது கண்டக்டரே இல்லயா"

"நல்லா தேடிபாருங்கப்பா"

"பஸ்ஸ நிருத்துங்கப்ப"

பேருந்து கிறீச்சிட்டு நின்றது.

"என்னயா பிரச்சனை"-இது ட்ரைவர்.

"கண்டக்டர் ஏரல சார்"

"என்னய சொல்றீங்க?!"

"ஆமா சார், கண்டக்டர காணல"

"நான் அப்பவே நினைச்சேன் சார்"-இது ஒரு பெரியவர்.

"யோவ் பெரிசு,அப்பவே சொல்லி தொலைக்கவேண்டியது தானே"

"கட்டைல போர ட்ரைவரு,கண்டக்டர் இல்லாதது கூட
தெரியாம என்னய பஸ்ஸ ஓட்டுர"--இது ஓரு தாய்குலம்.

"எல்லாம் அமைதிய இருங்க, கண்டக்டர் அடுத்த பஸ்-ல
எப்படியும் வந்துருவாரு..."--இது ட்ரைவர்.

"சரி ஆனது ஆகி போச்சு,கண்டக்டர் வர வரைக்கும்
ஒரு படம் போடு சார்,என்ன மாப்ல நான்
சொல்ரது"--இது செவப்பு சட்டை.

"ஆங்"

"திஸ் இஸ் ரிட்டிகுலஸ்,அப்சர்ட் "--இது என் முன்னாடி உட்கார்ந்திருந்தவர்.
அமெரிக்க வாழ் இந்திய மென்பொருளாலர் போல.

"என்ன மாப்ல சொல்ராரு அவரு "

"இங்லீஸ் படம் போட சொல்ராரு போல கீது"

"யோவ் சும்மா இருங்கப்ப"

அடுத்த வந்த பஸ்ல இருந்து கண்டக்டர் அவசரமாக
இறங்கி வந்தார்.

வந்தவர் முதல்ல கேட்ட கேள்வி ,"யாருயா, நான் பஸ் கதவு
பக்கம் இருந்த போது விசில் அடிச்சி ரைட் சொன்னது"

பேருந்தில் பெரும் நிசப்தம்.

செவப்பு சட்டையும் மஞ்சள் சட்டையும்
கண்டக்டரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
கண்டக்டர் ரைட் சொல்ல மீண்டும் பேருந்து
புறப்பட்டது.

ட்ரைவர் என்ன நினைத்தரோ தெரியல "தூள்" படம் போட்டார்.

"இத முன்னாடியே போட்டிருந்த நாம்ப விசில் அடிச்சி
ரைட் சொல்லிருந்திருப்பமா, என்ன மாப்ல நா சொல்ரது"

"ஆங்"

Fine, jokes apart.
I keep pondering,being a software engineer
whether I do have the same enthusiasm that
those two guys have?

Tuesday, July 11, 2006

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

பஞ்சத்தின் நிழல் படிந்திருந்த 1930-க்ளில்
இப்படி எழுத பாரதியால் தான் முடியும்.

பாரதியின் படைப்புகள் அதிகம் படித்ததில்லை, ஆனால்
கல்லூரி நாட்களில் ஞானராஜசேகரின் "பாரதி" படம்
பார்த்ததுண்டு. பாரதியை பற்றி நிறைய படித்திருக்கிறேன்,
வியந்திருக்கிறேன்,அசந்திருக்கிறேன்.

காலத்தை கடந்த சிந்தனை,சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளின் மேல்
உள்ள கோபம்,"தமிழ் இனி மெல்லச் சாகும்", எனும் போது
தெரிகின்ற முன் கோபம், "விசையுறு பந்தினை போல்...",எனும் போது
உலகத்தை மாற்ற சக்தியை வேண்டுதல்,யோக மந்திரத்தில் தான்
சாதாரண கூட்டதை சேர்ந்தவன் இல்லை என முழங்குதல்,இலாகிரி
பழக்கங்களை தொடும் போது தெரிகின்ற ஒரு வித restlessness,
இப்படி நிறைய eccentric குணாயதிசியங்கள்.

தான் நோபல் பரிசுக்கு தகுதியானவன் என உலகிற்கு அறிவிக்கும்போது
கூட அதில் தெரிவது அவரது தன்னம்பிக்கையும்,
உலகம் உணராத உண்மையும் தான்.

தீண்டாமை இருந்த போது, "காக்கை குருவி எங்கள் சாதி"-என்று
சொன்னதால் மக்களுக்கு புரியவில்லை.சம கால மக்களால்
அறிந்து கொள்ள முடியாத மேதமைக்கும்,
அலைவரிசை ஒத்துலையாமைக்கும் யாரை குறை சொல்வது.

அதனால் தான் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துக்கொண்டாரோ என்னவோ..?


ஒவ்வொரு முறை தர்மபுரி செல்லும் போதும், ஓசூர் பேருந்து நிலையத்தில்
பேருந்து கூடவே ஓடி வந்து பழம் விற்கும் ஒரு சிறுவனை கவனித்து இருக்கிறேன்.
அவனுக்கு கீழிருந்து பேருந்தின் சன்னல்கள் கூட எட்டாது.

"என்னடா பேரு"-இது நான்.

"விஜி காந்த்..... பழம் வாங்கு சார்,ஒருபாக்கு ஒண்ணு"

"எவ்வளவு சம்பாதிப்ப ஒரு நாளைக்கு"

"எறனூறு ரூவா கெடைக்கும் சார்"

"பள்ளி கூடம் -லா போறது இல்லயா"

"எதுக்கு சார்...பழம் வாங்குறியா இல்லயா சார்,ஒருபாக்கு ஒண்ணு"

"சாயந்திரம் என்னடா பண்ணுவே...."

"எங்க தலைவர் படதுக்கு போவேன்."

அடுத்த பெங்களூர் பேருந்து வந்தது,கூடவே ஓடி
மாயமாகி விட்டான்.

எங்கோ தூரத்தில் அவன் குரல் கேட்டது.

"பழம், ஒருபாக்கு ஒண்ணு, ஒருபாக்கு ஒண்ணு"

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்......!!

Tuesday, June 13, 2006

பதினைந்து நிமிட புகழ்

சுஜாதா, தமிழகத்தின் முதல் பத்து மோசடிகளில், தொலைகாட்சியில் வரும், அந்த தொலைபேசியில் பேசி தனக்கு பிடித்தமான பாடலை கேட்கும் நிகழ்ச்சியை குறிப்பிட்டிருந்தார்.அந்த நிகழ்ச்சியில் தொலைபேசுபவர்களின் psychology,எதிர்பார்புகள் முதலில் எனக்கு புரியவில்லை. சாப்டீங்களா, என்ன சமையல், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,காதல் பத்தி என்ன நினைக்கறீங்க,எவ்வளவு பேரை காதலிச்சிருகீங்க போன்ற தேவையற்ற விசாரிப்புகள்,செயற்கை சிரிப்புகள்,துள்ளல்கள் தான் அதிகம் பார்க்க முடிகிறது.


Andy warhol சொன்ன "In the future everyone will have their fifteen minutes of fame" என்ற அவரது கூற்று தான் நினைவிற்க்கு வருகிறது.எதிர்க்காலத்தில் எல்லா மனிதர்களும் ஒரு பதினைந்து நிமிடமாவது புகழின் உச்சியில் இருப்பார்கள் என்றார். ஊடகங்களின் வளர்ச்சியை நினைவில் கொண்டு அவர் சொன்ன அந்த கூற்று இப்போது ஒரு வகையில் உண்மையாகிக்கொண்டிருகிறது.சன் music-ல பேசுகின்ற தொலைகாட்சி நேயர்கள் எல்லோரும் அந்த பதினைந்து நிமிட புகழுக்கு சொந்தக்காராகள்.தன்னுடைய குரல் தொலைகாட்சியில் அறியப்படும்போது ஒருவித சந்தோசம்.என் நண்பனுக்கு Hema Sinha-விடம் பேசினால் மோட்சம் அடைந்தது போல. எல்லா மனிதர்களும் ஒரு விதமான புகழ்போதைக்கு அடிமையானவர்கள். நான்,இதை படித்து கொண்டிருகின்ற நீங்கள்,எல்லோரும் புகழுக்காக ஏங்குபவர்கள் என்றே நினைகிறேன்.
இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் அந்த பதினைந்து நிமிட புகழ் எளிதில் கிடைத்துவிடுகிறது.


சென்னை போயிருந்த போது, ரேடியோ மிர்ச்சியில் ஒரு சுவாரச்யமான உரையாடல் கேட்டேன்.
துள்ளலான,சற்றே freak-ஆன ஆண் குரல் --நிகழ்ச்சி நடத்துனர்,
"Hello,உஙக பேர் என்னஙக"

ஒரு இனிமையான,அழகான பெண் குரல் பேசியது.
"அமிர்த வர்ஷினி"

"சொல்லுங்க அமிர்த வர்ஷினி, என்ன செய்யறீங்க"

"அழகான பெளர்ணமி நிலவை ரசிச்சிட்டிருக்கிறேன்"

சற்றே ஜெர்க்கான நிகழச்சி நடத்துனர்,"சரி, என்ன பாடல் வேணும்க"

"சுட்டும் விழிச்சுடரே....."

"யாருக்கு டெடிக்கேட் பன்ணனும்"

"எனக்கும், இந்த அழகான பெளர்ணமி நிலவுக்கும்"

"...!!###$$"

அந்த அழகான அமிர்த வர்ஷினிக்கு இதுவரை காதலன் கிடைத்திருக்க கூடாது என கடவுளை வேண்டுகிறேன்.

Saturday, January 21, 2006

Mahabalipuram photos --Sea shore temple















Mahabalipuram also called as Mamallapuram is a temple town situated along the shores of Bay of Bengal about 55 kms from Madras.The temple and the city was built by Pallava king
Narasimha varman in 7th century A.D.





Mahabalipuram photos --Rathas and..























As the dusk falls...

Mahabalipuram photos --Dance festival and..















The dance festival
in the lights...









Related Posts Plugin for WordPress, Blogger...

Email Subscriptions powered by FeedBlitz

Your email address:


Powered by FeedBlitz